உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / என்றும் பதினாறு

என்றும் பதினாறு


கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
   கபடு வாராத நட்பும்
  கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
    கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
   தவறாத சந்தானமும்
 தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
    தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
     துன்பமில்லாத வாழ்வும்
  துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
     தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
   ஆதிகடவூரின் வாழ்வே!
 அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
    அருள்வாமி! அபிராமியே!

கல்வி, நீண்ட ஆயுள், கபடுஇல்லாத நட்பு, நிறைந்த செல்வம், எப்போதும் இளமை, பிணி இல்லாத ஆரோக்கியமான உடல், சலிப்பு வராத மனம், அன்பு நீங்காத மனைவி, புத்திர பாக்கியம், குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான உத்தமகுணம், எந்தத் தடையும் ஏற்படாத கொடை (அளித்தல்), செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசன், துன்பமில்லாத வாழ்வு, உன் திருவடிமேல் வைக்கும் பக்தி, இந்தப் பதினாறும் இதற்கு அப்பால் உன் அடியார்களை என்றும் பிரியாத வரங்களை தர வேண்டும் அபிராமி தாயே என வேண்டி போற்றுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !