கோட்டை வாராகி அம்மன் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா நிறைவு
ADDED :1151 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோட்டை வாராகி அம்மன் வழிபாட்டு மன்றத்தில் ஆஷாட நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. ஆஷாட நவராத்திரி நிறைவு நாளான நேற்று அபிஷேகம், யாகசாலை பூஜை முடிந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.