உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு

காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் ஆனி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.

கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் இன்று ஆனி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது. அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், கால சந்தி பூஜை, விஷ்வக் சேனர், கலச ஆவாகனம் ஆகிய பூஜைகள் நடந்தன. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. வைபவத்தில் தங்கத்தால் ஆன சங்கு சக்கர அபய ஹஸ்தம் மற்றும் வெள்ளியிலான ரத்ன அங்கியில் பெருமாள் அருள்பாலித்தார். மேளதாளம் முழங்க, கோவில் வளாகத்தில் வெள்ளி சிம்மாசனத்தில் அரங்கநாதர் புறப்பாடு நடைபெற்றது. பின்பு ஆஸ்தானம் அடைந்ததும், மகா தீபாராதனை செய்து, பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. இந்த வைபவ நிகழ்ச்சியில் கோவில் சலத்தார்கள், அர்ச்சகர்கள் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !