அதியமான் கோட்டை கால பைரவர் கோவில் தேரோட்ட பாதை அடைப்பு
ADDED :1080 days ago
தர்மபுரி: அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில், தேரோடும் பாதையை இரும்பு வேலியால் அடைத்தவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில், வள்ளல் அதியமானால் கட்டப்பட்ட கால பைரவர் கோவில் உள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமி நாளில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அப்போது கோவிலை வலம் வருவது வழக்கம். அந்த வழியாக கோவில் தேரோட்டமும் நடக்கும்.