திருமலைக்கேணியில் சங்கடஹர சதுர்த்தி விழா
ADDED :895 days ago
நத்தம், நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலின் அருகில் உள்ள விநாயகர் சன்னதியில் ஆனி மாத சங்கடஹர சதூர்த்தி பூஜைகள் நடந்தது. இதில் விநாயக பெருமானுக்கு அருகம்புல்,மல்லிகை, ரோஜா, போன்ற மாலைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது. நத்தம், கோபால்பட்டி, செந்துறை, சாணார்பட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் அங்கு வந்து திருமலைக்கேணி புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும், காமாட்சி மவுன குருசாமி மடத்திலும் பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதேபோல் வேம்பார்பட்டி சக்தி விநாயகர் கோவில், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவில் உள் பிரகாரத்தில் இருக்கும் விநாயகர் சன்னதியிலும் சங்கடகர சதுர்த்தி பூஜை நடந்தது.