உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாண்டுரங்கன் அலங்காரத்தில் பண்ருட்டி வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு

பாண்டுரங்கன் அலங்காரத்தில் பண்ருட்டி வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு

பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில், உற்சவர் பெருமாள் பண்டரிபுரம் பாண்டுரங்கன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று பெங்களுர் பாவ்ஸார் ஷத்திரிகர் குழுவினர் சார்பில் பண்டரிபுரம் பாண்டுரங்கன்-ருக்மாயி பஜன் திண்டி பஜன் குழுவினரின் ஆன்மிக நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு உற்சவர் பெருமாள் பண்டரிபுரம் பாண்டுரங்கன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !