பொருட்களை பதுக்காதீர்கள்
ADDED :975 days ago
வியாபாரத்தில் பொருட்களின் விலை என்பது சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறு அமையும். வரத்து அதிகமானால் பொருட்களின் விலை குறையும். வரத்து குறைந்தால் விலை கூடும். ஆனால் சில வியாபாரிகள் பொருட்களை பதுக்குகின்றனர். இது தவறானது. இவர்களுக்காகவே சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.
* பதுக்குபவர் பாவியாவார்.
* உணவுப்பொருட்களை பதுக்குபவர் தொழுநோயால் பாதிக்கப்படுவார்.
* பொருட்களின் விலையை அதிகரிப்பவர்கள், மறுமை நாளில் நரகத்தீயில் உட்கார வைக்கப்படுவர்.