தாண்டிக்குடி முருகன் கோயிலில் கார்த்திகை விழா
ADDED :892 days ago
தாண்டிக்குடி , தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா நடந்தது. இக்கோயிலில் ஜூலை 5ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜைகளும் நடந்து வருகின்றன. நேற்று கார்த்திகை விழாவை அடுத்து சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பஜன் நடந்தன. தொடர்ந்து விளக்கு பூஜை, ஆன்மீக சொற்பொழிவு, யாகம் நடந்தது. அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக மலைக் கோயிலில் தேரோட்டம் நடந்தது.