/
கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் நிறைவு: நள்ளிரவில் நடந்த தீமிதி திருவிழா
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் நிறைவு: நள்ளிரவில் நடந்த தீமிதி திருவிழா
ADDED :1123 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்ம உற்சவ நிறைவுயொட்டி, உண்ணாமுலை அம்மன் சன்னதி முன் நேற்று இரவு நள்ளிரவில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். உற்சவ நிறைவுயொட்டி, உண்ணாமுலை அம்மன் சன்னதி முன் சிறப்பு அலங்காரத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.