நாரதர் கடவுளின் அவதாரமா?
ADDED :1109 days ago
இல்லை.. கடவுள் பூலோகத்தில் பிறப்பெடுப்பதையே அவதாரம் என்பர். நாரதர் பிரம்மாவின் பிள்ளை. மகாவிஷ்ணுவின் பேரன். கடவுளின் அம்சம் பெற்றவர். நாராயண நாமத்தை சதா ஜபித்துக் கொண்டிருப்பவர். முக்காலமும் அறிந்தவர் என்பதால் திரிகால ஞானி என்று போற்றுவர். அவர் ஒரு ரிஷி, கடவுள் அல்ல.