அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை; பத்மாவதி தாயாரின் தரிசனம் பெற்று பக்தர்கள் பரவசம்
போடி: ஆடி 3 வது வெள்ளியை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் முத்தங்கி சேவை அலங்காரத்தில் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரின் தரிசனம் பெற்றனர்.
* போடி அருகே விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டன.
* போடி குலாலர்பாளையம் கல்கத்தா காளியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கூழ் காய்ச்சி பிரசாதமாக வழங்கப்பட்டன.
* போடி தாய் ஸ்தலம் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில், போடி திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் தரிசனம் பெற்றனர்.