உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூரில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு; யோகபைரவருக்கு அபிஷேக, ஆராதனை

திருப்புத்தூரில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு; யோகபைரவருக்கு அபிஷேக, ஆராதனை

திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு யோகபைரவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பைரவர் யோகநிலையில் அருள்பாலிக்கிறார். தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 9:30 அஷ்ட பைரவ யாகம் ரமேஷ் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் துவங்கியது. தொடர்ந்து காலை 11:30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பின்னர் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவர் யோக பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். தொடர்ந்து நடந்த தீபாராதனையை பக்தர்கள் திரளாக தரிசித்தனர். ஆஸ்தான ஓதுவார் மாசிலாமணி திருமுறைகள் பாராயணம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !