உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துதிக்கை மூலம் மவுத் ஆர்கன் வாசிக்கும் நெல்லையப்பர் கோவில் யானை

துதிக்கை மூலம் மவுத் ஆர்கன் வாசிக்கும் நெல்லையப்பர் கோவில் யானை

திருநெல்வேலி : திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி 53.கோவில் விழாக்களில் வீதி உலா வருவது, தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க செல்வது என திருநெல்வேலியின் செல்லப்பிள்ளையாக திகழ்கிறது. ஓராண்டுக்கு முன் யானையின் எடை 4 ஆயிரத்து 450 கிலோ இருந்தது. டாக்டர்களின் ஆலோசனைக்கு பிறகு தினமும் 3 மணி நேரம் நடை பயிற்சி, நீச்சல் குளம் பயிற்சியால், தற்போது 300 கிலோ எடை குறைந்துள்ளது. பாகன்கள் ராமதாஸ், விஜயகுமார் முயற்சியில் மாலையில் யானை, துதிக்கை மூலம் மவுத் ஆர்கன் வாசித்து கோயில் வசந்த மண்டபத்தை இசை மயமாக்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !