விநாயகர் சதுர்த்தி; செப்.18ல் விடுமுறை.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
ADDED :941 days ago
மதுரை; அனைத்து கோயில்களிலும் செப்.18 அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்நாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கருத்துக்களை வெளிப்படுத்தி வந்த நிலையில் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விடுமுறையை செப்.17 ல் இருந்து 18க்கு மாற்றி அரசாணை வெளியிட்டுள்ளது. இது ஆதின கர்த்தாக்கள், மடாதிபதிகள், ஹிந்துக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.