பாதூர் பூரணி பொற்கலை சமேத ஐய்யனார் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :827 days ago
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பூரணி பொற்கலை சமேத ஐய்யனார் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ பூரணி பொற்கலை சமேத ஐய்யனார் கோவில் ஊரணி திருவிழா கடந்த 29ம் தேதி துவங்கியது. இத்திருவிழா வரும் 12ம் தேதி வரை நடக்கிறது. இத்திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று முன்தினம் இரவு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் தீபாரதனை வழிபாடுகளும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இத்திருவிழா நடக்கும் நாட்களில் இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் வீதியுலா நடக்கிறது. 12ம் தேதி பொங்கல் வைத்து வழிபட்டு, சுவாமி குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து கோவிலை சென்றடைகிறார்.