உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாரத நாட்டில் சனாதன தர்மத்தை வேரூன்றச் செய்த ஆதிசங்கரருக்கு 108 அடி உயர சிலை; பணிகள் தீவிரம்

பாரத நாட்டில் சனாதன தர்மத்தை வேரூன்றச் செய்த ஆதிசங்கரருக்கு 108 அடி உயர சிலை; பணிகள் தீவிரம்

காந்த்வா ; மக்களுக்காகவும், உலக நன்மைக்காகவும் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஆதிசங்கரர். 32 ஆண்டுகள் மட்டுமே பூமியில் வாழ்ந்த ஆதிசங்கரர் தர்மத்தையும், வேதத்தின் தத்துவத்தையும் போதித்துள்ளார். சனதான தர்மத்தின் தத்துவங்களை விளக்கியுள்ளார். பாரத நாட்டில் சனாதன தர்மத்தை ஆழ வேரூன்றச் செய்தவர் ஆதிசங்கரர். இவருக்கு மத்திய பிரதேசத்தின் காந்த்வா மாவட்டத்தில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலத்தில் ஒன்றான ஓம்காரேஷ்வர் கோவிலில் 200 கோடி ரூபாய் மதிப்பிலான 108 அடி உயர சிலையை நிர்மாணிக்கும் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் திறந்து வைக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !