ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி
ADDED :765 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு மேல் வேதபிரான் சுதர்சன், கிருஷ்ணன் பிறப்பு புராணம் வாசித்தார். இதனை தொடர்ந்து இரவு 12:00 மணிக்கு, ரேவதி குறட்டில் கிருஷ்ணர் பிறப்பு வைபவம் நடந்தது. பின்னர் நேற்றிரவு 7:00 மணிக்கு மேல் ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், விளையாட்டு கண்ணன் மாடவீதி மற்றும் ரத வீதி சுற்றி வந்தனர். அப்போது கம்மாபட்டி இளைஞர்கள் நான்கு ரதவீதிகளில் உறியடித்தனர். ஆடிப்பூர பந்தலில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் இளைஞர்கள் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.