ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்; புனித நீராடி வழிபாடு
ADDED :816 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து அரசு பஸ், வாகனங்கள் மூலம் ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் முதலில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்து கடலில் புனித நீராடினார்கள். பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். தொடர்ந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் பக்தர்கள் பயபக்தியுடன் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.