உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா; தாமரை வாகனத்தில் விநாயகர் உலா

பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா; தாமரை வாகனத்தில் விநாயகர் உலா

பிள்ளையார்பட்டி; தமிழகத்தின் பிரசித்திப் பெற்ற நகரத்தார் கோயிலான கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் நடைபெறும். இங்கு சதுர்த்திப் பெருவிழா செப்.10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினசரி காலையில் வெள்ளி கேடகத்தில் உற்ஸவர் புறப்பாடும், இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்று வருகிறது. சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று தாமரை வாகனத்தில் விநாயகர் உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். செப்.15ல் மாலையில் கஜமுக சூரசம்ஹாரம் நடைபெறும். செப்.18ல் காலையில் சுவாமி தேருக்கு எழுந்தருளலும், மாலையில் தேர் வடம் பிடித்தலும் நடைபெறும். அன்றைய தினம் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தை மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை பக்தர்கள்  தரிசிக்கலாம். செப்.19ல் காலையில் கோயில் திருக்குளத்தில் அங்குசத்தேவருக்கு  விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி நடைபெறும். மதியம் 2:00 மணி அளவில் மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையலிடப்படும். இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும். மாலையில் கலைநிகழ்ச்சிகள், ஆன்மீக உரை,இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !