/
கோயில்கள் செய்திகள் / பக்தர்களுடன் நீராடிய வெயிலுகந்த விநாயகர்; ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலிப்பு
பக்தர்களுடன் நீராடிய வெயிலுகந்த விநாயகர்; ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலிப்பு
ADDED :743 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி தீர்த்தவாரியை முன்னிட்டு, 2 கி.மீ., தொலைவில் உள்ள மோர்ப்பண்ணை கடலிலில் பக்தர்களுடன் நீராடிய விநாயகர், கடலில் இருந்து ரிஷப வாகனத்தில் விரதம் இருந்த பக்தர்களுடன் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தார். முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்த விநாயகருக்கு பெண்கள் தெருக்களில் மாக்கோலமிட்டு வரவேற்பளித்தனர். வீடுகள் தோறும் விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். பின்பு மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு தீப ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.