சித்தி விநாயகர் கோவிலில் மண்டல பூஜை விழா நிறைவு
ADDED :748 days ago
கோவை ; மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை, மருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கா. புங்கம்பாளையம் கார்டன் சிட்டி சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் முடிந்து 48ம் நாள் மண்டல பூஜையில் இன்று நிறைவு விழா நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு விநாயகர் காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.