உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நம்மைக் காக்க ஒரு சூப்பர் சக்தி; விஷ்ணுமாயா கோவிலில் கட்டளைதாரராக நியமிக்கப்பட்ட குஷ்பு நெகிழ்ச்சி

நம்மைக் காக்க ஒரு சூப்பர் சக்தி; விஷ்ணுமாயா கோவிலில் கட்டளைதாரராக நியமிக்கப்பட்ட குஷ்பு நெகிழ்ச்சி

திருச்சூர் விஷ்ணுமாயா கோவிலில் சிறப்பு பூஜை செய்ய வருடத்திற்கு ஒரு பெண் கட்டளைதாரராக நியமிக்கப்படுவார். இம்முறை நடிகை குஷ்புவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

நடிகை குஷ்பூவை திருச்சூரில் விஷ்ணுமாயா கோவிலின்  சிறப்பு பூஜைக்காக கோவில் நிர்வாகம் அழைத்துள்ளது. குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது; விஷ்ணுமாயா கோவிலில் நாரிபூஜை செய்ய அழைக்கப்பட்டதை மிகவும் அதிர்ஷ்டமாக உணர்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள். தெய்வமே அந்த நபரைத் தேர்ந்தெடுப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். இப்படி ஒரு பெருமையை எனக்கு வழங்கிய கோவிலில் உள்ள அனைவருக்கும் எனது நன்றிகள். தினமும் பிரார்த்தனை செய்பவர்களுக்கும், நம்மைக் காக்க ஒரு சூப்பர் சக்தி இருப்பதாக நம்புபவர்களுக்கும் இது இன்னும் பல நல்ல விஷயங்களைக் கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !