உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செத்தவரை மோன சித்தர் அவதார திருநாள் ; பக்தர்கள் வழிபாடு

செத்தவரை மோன சித்தர் அவதார திருநாள் ; பக்தர்கள் வழிபாடு

செஞ்சி: செத்தவரை மோன சித்தர் ஆசிரமத்தில் நடந்த சிவஜோதி மோன சித்தர் அவதார திருநாள் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த செத்தவரை – நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள சிவஜோதி மோன சித்தர் ஆசிரமத்தில் இன்று சிவஜோதி மோன சித்தர் அவதார திருநாள் விழா நடந்தது, இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு மங்கள இசையும், 5 மணிக்கு கோ பூஜையும், 6 மணிக்கு சொக்கநாதர் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும். 7 மணிக்கு சிறப்பு தரிசனமும் நடந்தது. 8 மணி முதல் 10 மணிவரை 108 மூலிகைகளால் மகா ஹோமமும், 10 மணிக்கு மோன சித்தருக்கு சிவனடியார்கள் மற்றும் கலசாபிஷேகம் செய்தனர். 12 மணிக்கு மலரபிஷேகமும், 1 மணிக்கு மகேஸ்வர பூஜையும் நடந்தது. தொடர்ந்து சிவஜோதி மோன சித்தர் பக்தர்களுக்கு அருளாசியும், பிரசாதமும் வழங்கினார். இதில் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், புதுச்சேரி, சென்னை, திருக்கோவிலூர் பகுதியில் இருந்து வெளிநாட்டு பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு தொடர் அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !