சந்திர கிரகணம்; அக்டோபர் 28ல் திருப்பரங்குன்றம் கோயில் நடை அடைப்பு
ADDED :768 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு அக்டோபர் 28ல் நடை சாத்தப்படும். அன்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு இரவு 7 மணி முதல் கோயில் நடை அடைக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. மறுநாள் கிரகண பூஜை முடித்து மீண்டும் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.