/
கோயில்கள் செய்திகள் / இன்று சர்வ ஏகாதசி விரதம்; பெருமாளை வழிபட நலமும், வளமும் சேரும்.. நல்லதே நடக்கும்
இன்று சர்வ ஏகாதசி விரதம்; பெருமாளை வழிபட நலமும், வளமும் சேரும்.. நல்லதே நடக்கும்
ADDED :1021 days ago
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. கார்த்திகை வளர்பிறை ஏகாதசி கைசிக ஏகாதசி எனப்படுகிறது. கார்த்திகை ஏகாதசி விரதம் இருப்போர் செல்வம், உயரிய நிலையை பெறுவர். கைசிக ஏகாதசி விரதமிருந்தால் 21 தானங்களை செய்த பலன் கிடைக்கும். இன்று பெருமாளுக்கு துளசி சாற்றி பெருமாளை வழிபட துன்பம் யாவும் நீங்கும். பெருமாள் மந்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் தரும். கோவில் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விளக்கேற்றி வழிபடலாம்.