குருந்தமலை குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
ADDED :1021 days ago
மேட்டுப்பாளையம்; குருந்தமலை குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில், புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை இழுத்துச் சென்றனர்.
காரமடை அருகே குருந்தமலையில், மிகவும் பிரசித்தி பெற்ற, பழமையான குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள, பெரிய தேர், தேரோட்டத்திற்கு உபயோகப்படுத்த முடியாது என, ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து உபயதாரர்கள் உதவியுடன், இலுப்பை, தேக்கு ஆகிய இரண்டு வகை மரங்களால், தேர் செய்து முடிக்கப்பட்டது. இதில் மூன்று நிலை தேரில், கோவில் தல வரலாறு, சிவபுராணம், கந்தபுராணம், விஷ்ணு புராணம் ஆகியவை குறித்து, 148 சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.