மழைக் காரணமாக அரவிந்தர் அறை தரிசனம் 9ம் தேதிக்கு மாற்றம்
புதுச்சேரி; அரவிந்தர் மகா சமாதி தின அறை தரிசன நிகழ்ச்சி மழை காரணமாக
வரும் ஒன்பதாம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா தனகோஷ்-
ஸ்வர்ணலதா தம்பதிகளின் மகனாக 1872 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொல்கத்தா
நகரில் மகான் அரவிந்தர் பிறந்தார். விடுதலைப் போராட்ட வீரராக இருந்து, 1910
ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் புதுச்சேரிக்கு வந்த அவர் ஆன்மீக வாழ்வியலில்
ஈடுபட்டார். 1950 டிசம்பர் 5ஆம் தேதி ஆசிரமத்தில் இயற்கை எய்தினார். அவரது
மறைவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் மகா சமாதி தினமாக புதுச்சேரி ஆசிரமத்தில்
கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதை யொட்டி 73 ஆம் ஆண்டு மகா சமாதி தினம்
இன்று கடைபிடிக்கப்படும் என்று இருந்த நிலையில், மழை காரணமாக இன்று நடைபெற
வேண்டிய நிகழ்ச்சி வரும் ஒன்பதாம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.அன்றைய
தினம் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் காலை 6 மணிக்கு கூட்டு தியானமும்
மற்றும் அதனை தொடர்ந்து அரவிந்தர் வாழ்ந்த அறையை பக்தர்கள் தரிசனம் செய்ய
பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர்