திருப்பதி பெரிய ஜீயர் சுவாமி மடத்தில் திருப்பாவை பாராயணம்
ADDED :678 days ago
திருப்பதி ; மார்கழி மாத மஹோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, திருமலையில் உள்ள பெரிய ஜீயர் சுவாமி மடத்தில் திருப்பாவை பாராயணம் நடைபெற்றது. விசிஷ்டாத்வைத தத்துவத்தை நிறுவிய ஸ்ரீ பகவத் ராமானுஜாச்சாரியார் காலத்தில் திருமலையில் நாட்டில் ஜீயர் சுவாமி மடம் நிறுவப்பட்டது. இம்மடத்தில் நடைபெற்ற திருப்பாவை பாராயணத்தில் ஜீயர் சுவாமிகள் மற்றும் பிற வேத பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.