வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் பிரதோஷ பூஜை
மேட்டுப்பாளையம்; வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில், பிரதோஷ பூஜை நடந்தது.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு, அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. பால், தயிர், பன்னீர், சந்தனம், திருநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 16 வகையான வாசனை திரவியங்களால், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு பூக்களால் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கோவில் அர்ச்சகர் ஜோதி வேலவன் சிறப்பு பூஜைகளை செய்தார். பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோன்று மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரில் உள்ள மாதேஸ்வரன் கோவிலில், பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. இங்குள்ள காசி லிங்கேஸ்வரர் சுவாமிக்கு, அபிஷேகம் செய்து பூக்களால் அலங்காரம் செய்தனர். அதைத் தொடர்ந்து நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.