பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடராஜ பெருமானுக்கு அபிஷேக பூஜை
ADDED :778 days ago
கோவை ; கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் நடராஜ பெருமானுக்கும் சிவகாமி தாயாருக்கும் அதிகாலை முதல் அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நடராஜ பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.