உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப்பிரமணியர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்; நடராஜருக்கு சிறப்பு பூஜை

சுப்பிரமணியர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்; நடராஜருக்கு சிறப்பு பூஜை

போடி; ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடராஜருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.

நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து அதிகாலை நகர்வலம் புரிந்தனர். திருப்புகழ் சபையைச் சேர்ந்த பெண்கள் பஜனைகள் பாடினர். ஏற்பாடுகளை சங்கர ஆவடையம்மாள் கழுவன் செட்டியார் உறவின் முறையினர் செய்திருந்தனர். திருவாதிரை கழிப்பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரின் தரிசனம் பெற்றனர். பரம்பரை அறங்காவலர் முத்துராஜன், செயல் அலுவலர் ஹரிஷ் குமார் முன்னிலை வகித்தனர். சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர குருக்கள் செய்திருந்தார்.

* போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர், சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !