உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு

சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது.

திருக்கோவிலூர், தியாகி வடிவேல் நகரில் உள்ள சீரடி குபேர சாய்பாபா கோவில் வியாழக்கிழமையை முன்னிட்டு, இன்று காலை 8:00 மணிக்கு வேத பாராயணம், ஹோமங்கள், 10:00 மணிக்கு பாபாவிற்கு மகா அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சனை, ஆரத்தி வழிபாடு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆண்டு முழுவதும் அன்னதானத்திற்கு கைங்கர்யம் செலுத்தியவர்கள் கவுரவிக்கப்பட்டனர். கோவில் நிர்வாகி சுப்பு தலைமையில் நடந்த இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 7:00 மணிக்கு ஆரத்தி பூஜை, சுவாமி பல்லக்கு சேவையில் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !