உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்து வயதுக்குள் 50 முறை சபரிமலை பயணம்; கேரள சிறுமியின் அசர வைக்கும் ஐயப்ப பக்தி

பத்து வயதுக்குள் 50 முறை சபரிமலை பயணம்; கேரள சிறுமியின் அசர வைக்கும் ஐயப்ப பக்தி

சபரிமலை; கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி 50 முறை சபரிமலை சென்று ஐயப்பனை வணங்கி புண்ணியம் தேடி உள்ளார்.கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஏழுகோனை சேர்ந்தவர் அபிலாஷ் மணி. தீவிர ஐயப்ப பக்தர். மகள் அத்ரிதி 10. இவர் 9 மாத குழந்தையாக இருந்த போது அபிலாஷ் தனது கையில் தாங்கி சபரிமலை வந்து ஐயப்பனை தரிசனம் நடத்தினார். அதிலிருந்து நேரமும் வாய்ப்பும் கிடைக்கும் போதெல்லாம் மகளை அழைத்து சபரிமலை வந்து தரிசனம் நடத்தினார். மண்டல மகர விளக்கு காலம் மட்டுமல்லாமல் மாத பூஜை, சித்திரை விசு போன்ற எல்லா அனைத்து பூஜை காலங்களிலும் ம.களை தவறாமல் அழைத்து வந்தார். அத்ருதியும் மகிழ்ச்சியுடன் சபரிமலை பயணத்தை மேற்கொண்டார் எரிமேலியில் பேட்டை துள்ளல் இவருக்கு குதூகலத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் அதிருதிக்கு 10 வயது முடிவுடைய ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் நேற்று முன்தினம் சபரிமலை வந்து ஐயப்பனை வணங்கினார். இது அவரது 50 - வது சபரிமலை பயணமாகும். ஐயப்பனை வணங்கிய பின்னர் சன்னிதானத்தின் முன்புறம் நின்று போட்டோ எடுத்துக் கொண்ட அவர், ஐயப்பனை 50 முறை கண்டு வணங்கியது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று குறிப்பிட்டார். இனி 50 வயதுக்கு பின்னர் சபரிமலையில் ஐயப்பனை வணங்க மீண்டும் வருவேன் என்று அவர் தெரிவித்தார். பொதுவாக சபரிமலையில் 18 முறை வருபவர்கள் குரு சுவாமி என்று அழைக்கப்படுகிறார்கள். 18 முறை சபரிமலை வந்ததின் அடையாளமாக அந்த பக்தர் சன்னிதானத்தில் பின்புறம் உள்ள பஸ்மகுளம் அருகே தென்னங்கன்றுகளை நடவு செய்வார்கள். ஆனால் 10 வயதுக்குள் 50 முறை சபரிமலை வந்து தரிசனம் நடத்தி உள்ளது பக்தர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அத்ரிதி ஏழுகோன் ஸ்ரீ நாராயண குரு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !