உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தட்சணகாசி காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை; பூசணியில் தீபமேற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன்

தட்சணகாசி காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை; பூசணியில் தீபமேற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன்

தர்மபுரி; தேய்பிறை அஷ்டமியையொட்டி, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில் நேற்று, சிறப்பு பூஜை நடந்தது. கோவிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள், சாம்பல் பூசணியில் தீபமேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக, காலை, 6:00 மணிக்கு, தட்சணகாசி காலபைரவருக்கு, அஷ்டபைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தன. நள்ளிரவு, 12:00 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு யாக பூஜை நடந்தது. இதேபோல், தர்மபுரி நகர் கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் பிரகாரத்திலுள்ள பைரவருக்கு நேற்று, சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !