உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனுக்கு அரோகரா; 400 ஆண்டு பாரம்பரிய நகரத்தார் காவடிகள் பழனிக்கு புறப்பட்டது

முருகனுக்கு அரோகரா; 400 ஆண்டு பாரம்பரிய நகரத்தார் காவடிகள் பழனிக்கு புறப்பட்டது

காரைக்குடி; குன்றக்குடியிலிருந்து பாரம்பரிய நகரத்தார் காவடிகள் பாதயாத்திரையாக பழனிக்கு புறப்பட்டது.

ஆண்டுதோறும் பழனி தைப்பூசத் திருவிழாவிற்கு, நகரத்தார்கள் காவடிகள் ஏந்தி, பழனிக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். கடந்த 400 ஆண்டுகளாக இதனை பாரம்பரியமாக செய்து வருகின்றனர். காவடிகளுடன் பாதயாத்திரையாக சென்று மீண்டும் பாதயாத்திரையாக திரும்புவர். இவ்வாண்டு தைப்பூசத் திருவிழா வருகின்ற 25 ஆம் தேதி நடக்கிறது. இதனையொட்டி, காரைக்குடி, கண்டனூர், கோட்டையூர், தேவகோட்டை, பலவான்குடி, கொத்தமங்கலம், கல்லல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நகரத்தார்கள் காவடிகளுடன் பாதயாத்திரையாக, குன்றக்குடியை வந்தடைந்தனர். குன்றக்குடியில் சிறப்பு பூஜைகளை முடித்து, நேற்று காலை, இடும்பன் வேல் முன்னதாக செல்ல 330 நகரத்தார்கள் காவடி ஏந்தி பாதயாத்திரையாக சென்றனர். ஜன.24ஆம் தேதி காவடிகள் பழனிக்கு சென்றடையும். ஜன.27 ஆம் தேதி காவடி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் ஜன.31 ஆம் தேதி காலை, காவடி விடைபெற்று ஊர் திரு முதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதேபோன்று பாரம்பரியமாக காவடிகள் எடுத்துச் செல்லும், 200 நாட்டார் காவடிகள் நேற்று குன்றக்குடியில் இருந்து பழனிக்கு புறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !