உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றக்குடியில் தைப்பூச தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்

குன்றக்குடியில் தைப்பூச தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்

காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் தைப்பூசத்தையொட்டி தேரோட்டம் நடந்தது.

குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் தைப்பூசத் திருவிழாவையொட்டி கடந்த ஜன.16 அனுக்ஞை பூஜை, விக்னேஸ்வர பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில், தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தினமும் சுவாமி வீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று மாலை முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேரோட்ட நிகழ்ச்சியை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தொடங்கி வைத்தார் நான்கு ரத வீதி வழியாக தேர் இழுக்கப்பட்டு தேர் நிலையை வந்தடைந்தது. இதில், காரைக்குடி, குன்றக்குடி மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று தைப்பூசத் திருவிழாவும் ஜன. 27 மஞ்சு விரட்டும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !