உலக அமைதி வேண்டி உய்யவந்த அம்மனுக்கு 1008 இளநீர் அபிஷேகம்
ADDED :580 days ago
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை உய்யவந்த அம்மன் கோயிலில் உலக அமைதி வேண்டி. சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில், 1008 இளநீர் அபிஷேகம் உட்பட அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் சாக்கோட்டை புதுவயல் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.