திருப்பரங்குன்றம் கோயிலில் அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம்
ADDED :718 days ago
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது.
பல்லக்கில் அஸ்தரதேவர் சரவணப்பொய்கை கொண்டு செல்லப்பட்டார். ஆறுமுக சுவாமி சன்னதி முன்பு யாகம் வளர்க்கப்பட்டு, பூஜை முடிந்து சரவண பொய்கை தண்ணீரில் அஸ்தர தேவருக்கு பால், மஞ்சள் பொடி, திரவியப்பொடி உள்பட 16 வகை அபிஷேகம் முடிந்து தீர்த்த உற்ஸவம் நடந்தது. பால்சுனைகண்ட சிவபெருமானுக்கு அபிஷேகம், பூஜை முடிந்து 1008 லிங்க கவச அலங்காரமானது.சரவணப்பொய்கையில்
குவிந்த மக்கள்: அமாவாசை தினங்களில் சரவணப் பொய்கையில் மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கின்றனர். நேற்று தை அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான மக்கள் வந்தனர். கூட்டம் அதிகளவில் இருந்ததால் காத்திருந்து தர்பணம் கொடுத்து சென்றனர்.