உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுர்த்தி விரதம்; விநாயகரை வழிபட வளமான வாழ்வு அமையும்

சதுர்த்தி விரதம்; விநாயகரை வழிபட வளமான வாழ்வு அமையும்

விநாயகப் பெருமான் இந்து சமயத்தின் முழு முதற் கடவுள். விநாயகரை வழிபட சிறப்பானது சதுர்த்தி தினம். முழு முதற்கடவுளாகிய விநாயகப் பெருமானை வழிபடுவதற்குரிய முக்கியமான விரதம் இந்த சதுர்த்தி விரதம். சதுர்த்தி நாளில் விரதமிருந்து விநாயகப் பெருமானை வழிபட்டால் சகல விதமான துன்பங்கள், தோஷங்கள் விலகி வளமான வாழ்வு அமையும். முதலில் தன் தாய் பார்வதிக்கு கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது எல்லாம் இவ்விரதம் இருந்து தான். சங்கடம் என்றால் துன்பம். ஹர என்றால் அழித்தல். அனைத்து விதமான துன்பங்களையும் தீர்க்கக் கூடியது சதுர்த்தி என்பதால் இந்த நாளில் விநாயகரை நினைத்து வழிபட்டால் நினைத்தது நினைத்தபடி நடக்கும். இந்த நாளில் விநாயகரை வழிபட்டால் நிம்மதியும் நிறைவுமாக வாழலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !