உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் மாசி பவுர்ணமி வழிபாடு; பிப்., 21 முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரியில் மாசி பவுர்ணமி வழிபாடு; பிப்., 21 முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மாசி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு பிப்.21 முதல் 24 முடிய 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது. இக்கோயிலில் பிப். 21ல் மாசி மாத பிரதோஷம், பிப். 24ல் பவுர்ணமி வழிபாடும் நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு பிப். 21 முதல் 24 வரை தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள், எதிர்பாராத விதமாக கனமழை பெய்தால் மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவது நிறுத்தி வைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது மலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் நிலையில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டுமென சாப்டூர் வனச்சரகர் செல்வமணி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !