மாசி கடைசி சோமவாரம்; புஷ்ப அலங்காரத்தில் ஆதி கும்பேஸ்வரர்
ADDED :650 days ago
கோவை; ராம் நகர் வி. என். தோட்டம் முத்து மாரியம்மன் கோவிலில் இருக்கும் ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் மாசி மாதம் கடைசி சோம வார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆதி கும்பேஸ்வரர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. இதில் வெண்பட்டு உடுத்தி புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.