உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பகோணத்தில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்தார் அத்திவரதர்: 10 நாட்கள் தரிசிக்கலாம்

கும்பகோணத்தில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்தார் அத்திவரதர்: 10 நாட்கள் தரிசிக்கலாம்

தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு அத்திவரதர் சிறப்பு பூஜையுடன் வெளியே வந்தார். 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், பிரம்மன் கோவில் தெருவில், சவுராஷ்டிர தர்ம பரிபாலன கமிட்டி நிர்வாகத்தால்,  கடந்த 1739ம் ஆண்டு  கட்டப்பட்ட வரதராஜ பெருமாள், வேதநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், அத்திமரத்தினால் உருவாக்கப்பட்ட, அத்திவரதை தரிசனம் செய்தால் சகல தோஷங்களும், முன்ஜென்ம பாவங்களும், நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். கடந்த 1915ம் ஆண்டு அத்திவரதர் பாதாள அறையில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் பின்னர் சுமார் 98 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2013ம் ஆண்டு, அத்திவரதர் வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு  நாளை (1ம் தேதி)  முதல் வரும் (10ம் தேதி) வரை, அத்திவரதர் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். 

இதற்காக இன்று மாலை, சுமார் ஒன்றரை அடி உயரத்தில், அத்திமரத்தால் செய்யப்பட்ட அத்திவரதர், பாதாள அறையில் இருந்து எடுத்து வரப்பட்டு, தைலகாப்பு அலங்காரம் செய்து, சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களின் பார்வைக்காக கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்டது. விழா நாட்களில் தைலகாப்பு, புஷ்பசேவை, ஊஞ்சல் சேவை ஆகியவை நடக்கிறது. தினமும் காலை 8 மணி முதல்  மதியம் 12 மணி வரையும், மாலை  5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் சாமி தாிசனம் செய்ய உகுந்த நேரம் என  சவுராஷ்டிரா தர்மபரிபாலன கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு, 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு சயன மற்றும் நின்ற கோலத்தில் அரு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !