உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவனை பூஜிக்கும் சப்தரிஷி

சிவனை பூஜிக்கும் சப்தரிஷி


காசி என்றதும் நினைவுக்கு வருவது கங்கை நதியும், காசி விஸ்வநாதர் கோயிலும் தான். விஸ்வ நாதருக்கு தினமும் இரவு 7.45 - 8.30 மணி வரை சப்தரிஷி பூஜை நடக்கும். அத்ரி, வசிஷ்டர், கஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகிய ஏழு பேரும் சப்தரிஷிகளாவர். வான மண்டலத்தில் சனி உலகத்திற்கு வடக்கே சப்தரிஷி மண்டலம் உள்ளது. அங்கிருந்து வந்து தினமும் காசி விஸ்வநாதரை இவர்கள் பூஜிப்பதாக ஐதீகம். இதனை குறிக்கும் விதமாக ஏழு அந்தணர்கள் (7பண்டாக்கள்) விஸ்வநாதரைச் சுற்றி நின்று பூஜை நடத்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !