ஆலகாலம் – பொருள்
ADDED :582 days ago
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் விஷத்தைக் கக்கியது. அப்போது கடலில் இருந்தும் விஷம் வெளிப்பட்டது. இரண்டு விஷங்களும் ஒன்று சேர்ந்தன. ‘ஆலம்’ என்பதற்கு விஷம் என பொருள். இரு விஷங்கள் இணைந்தால் அதை ‘ஆலாலம்’ என்றனர். பேச்சு வழக்கில் ‘ஆலகாலம்’ என்றாகி விட்டது.