உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி சந்தன மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா

பரமக்குடி சந்தன மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா

பரமக்குடி; பரமக்குடி சந்தன மாரியம்மன் என்ற பத்ரகாளியம்மன் கோயிலில் 61வது ஆண்டு பங்குனி பொங்கல் விழா துவங்கியது. தொடர்ந்து இன்று தொடங்கி பூச்சொரிதல் விழாவையொட்டி அம்மன் சூலம் ஏந்தி அமர்ந்த திருக்கோலத்தில் வீதி வலம் வந்தார். அப்போது பெண்கள் பூத்தட்டுகளை ஏந்தி வந்தனர். மார்ச் 19 இரவு 7:30 மணிக்கு காப்பு கட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்குகிறது. தினமும் காலையில் அபிஷேகங்களும், இரவு 8:30 மணிக்கு தீபாராதனைகள் நடக்கிறது. மார்ச் 26 அக்னிசட்டி, பொங்கல் விழா மற்றும் இரவு அம்மன் கரகம் எடுக்கப்படும். மார்ச் 29 பால்குடம் மதியம் 12:00 மணிக்கு அன்னதானம், மாலை திருவிளக்கு பூஜை, புஷ்ப அலங்காரம் நடக்கிறது. ஏற்பாடுகளை சத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !