/
கோயில்கள் செய்திகள் / அதிகார நந்தி வாகனத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் வீதி உலா; பக்தர்கள் குவிந்தனர்
அதிகார நந்தி வாகனத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் வீதி உலா; பக்தர்கள் குவிந்தனர்
ADDED :741 days ago
சென்னை; மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று அதிகார நந்தி வாகனத்தில் கபாலீஸ்வரர் மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா, விடையாற்றி கலை விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று காலை இன்று அதிகார நந்தி வாகனத்தில் கபாலீஸ்வரர் மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார். நான்கு மாட வீதிகளிலும் கம்பீரமாக ஆடி அசைந்து, அதிகார நந்தி வாகனத்தில் வந்த கபாலீஸ்வரரை பக்தர்கள் கபாலி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். வரும் 22ல் தேர்த்திருவிழா நடக்கிறது. காலை 9:00 மணிக்கு பக்தர்களால் வடம் பிடிக்கப்படுகிறது.