உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலையில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்

மருதமலையில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்

வடவள்ளி; மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணியசுவாமி சுவாமிக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து, சுப்பிரமணியசுவாமி, முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பங்குனி உத்திரத்தையொட்டி, காலை, 10:00 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, பல்லக்கில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பங்குனி பவுர்ணமி மற்றும் உத்திரத்தையொட்டி, ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து பாதயாத்திரையாக வந்து சுவாமியை தரிசித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !