/
கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் செப்பு தேரோட்டம்; கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் செப்பு தேரோட்டம்; கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
ADDED :584 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு இன்று காலை 6:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் கோயிலில் இருந்து புறப்பட்டு செப்பு தேருக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் காலை 7:00 மணிக்கு செப்பு தேரோட்டம் துவங்கியது. கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். கோயில் யானை முன் செல்ல நான்கு ரதவீதிகள் சுற்றி வந்து ஒரு மணி நேரத்தில் தேர் நிலையம் அடைந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் கோயில் பட்டர்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.