திருப்பூர் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் மூலவருக்கு சிறப்பு பூஜை
ADDED :723 days ago
திருப்பூர்; திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் தாளக்கரை பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் பங்குனி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் சந்தன காப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.