உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேய்பிறை சஷ்டி; பால தண்டாயுதபாணி கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

தேய்பிறை சஷ்டி; பால தண்டாயுதபாணி கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை; கோவை பட்டேல் ரோடு , செங்குப்தாரோடு சந்திப்பில் உள்ள பால தண்டாயுதபாணி, மகா கணபதி, துர்க்கை அம்மன் கோவிலில் சித்திரை தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் புஷ்ப அலங்காரத்தில்  வள்ளி தேவசேனா சமேதரராய் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !